ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம்

Published On 2021-06-22 08:41 GMT   |   Update On 2021-06-22 08:41 GMT
சக்கரத்தாழ்வாரின் நட்சத்திர தினத்தையொட்டி (ஆனி - சித்திரை) ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்திலுள்ள சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்திலுள்ள சக்கரத்தாழ்வாருக்கு நட்சத்திர தினத்தையொட்டி (ஆனி - சித்திரை) சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெறும்.

ஆனால் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த வருடம் கோவில் உள் விழாவாக கொண்டாடப்பட்டது.

சக்கரத்தாழ்வாரின் நட்சத்திர தினத்தையொட்டி (ஆனி - சித்திரை) காவிரி ஆற்றிலிருந்து ஆண்டாள் யானை மேல் வைத்து வெள்ளி குடத்தில் புனித நீர் நேற்று எடுத்து வரப்பட்டது.

இந்த புனித நீரை கொண்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்திலுள்ள சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் அர்ச்சகர்கள், நிர்வாகிகள் மட்டுமே சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News