செய்திகள்
மழை

கனமழை எதிரொலி- காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2021-01-12 02:48 GMT   |   Update On 2021-01-12 02:48 GMT
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News