ஆன்மிகம்
கார்மல்நகர் புனித சந்தியாகப்பர் குருசடி விழா

கார்மல்நகர் புனித சந்தியாகப்பர் குருசடி விழா

Published On 2021-07-28 03:54 GMT   |   Update On 2021-07-28 03:54 GMT
நாகர்கோவில் ராமன்புதூர், கார்மல்நகர் செயின்ட் மேரீஸ் தெருவில் உள்ள புனித சந்தியாகப்பர் குருசடி ஆலய திருவிழா அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி எளிமையாக நடந்தது.
நாகர்கோவில் ராமன்புதூர், கார்மல்நகர் செயின்ட் மேரீஸ் தெருவில் புனித சந்தியாகப்பர் குருசடி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் புனித சந்தியாகப்பர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு விழா அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி எளிமையாக நடந்தது. கார்மல்நகர் பங்குதந்தை சகாயபிரபு தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பங்குதந்தை சகாயபிரபு, பங்கு நிர்வாக குழு தலைவர் ஜோசப் ஆன்டனி, செயலாளர் ஆன்டனி தனிஸ், பொருளாளர் லியோன் ஜேசு ரெத்னம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கார்மல்நகர் நண்பர்கள் சங்க நிர்வாகிகள் ஜெரோம் ஜெயக்குமார், பென்னட் ஜெயசிங், லூயிஸ் பிரபு, ஜெயக்குமார் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News