செய்திகள்
பணம்

வாலிபர் வங்கி கணக்கில் ரூ.61 ஆயிரம் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Published On 2021-10-15 08:43 GMT   |   Update On 2021-10-15 08:43 GMT
வள்ளியூர் அருகே வாலிபர் வங்கி கணக்கில் ரூ.61 ஆயிரம் மோசடி செய்யப்பட்டதையடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
நெல்லை:

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 28). இவரது செல்போனுக்கு கடந்த 1-ந்தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் தங்களது ‘கூகுல் பே’ அக்கவுண்டை அப்டேட் செய்யும்படி கூறி இருந்தது.

இதைத்தொடர்ந்து கண்ணன் அப்டேட் செய்தார். அப்போது ஓ.டி.பி. எண் கேட்டதால் அதை கண்ணன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரது அக்கவுண்டில் இருந்து ரூ.61 ஆயிரம் வேறொரு வங்கி கணக்கிற்கு சென்று விட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News