செய்திகள்

ஐபிஎல்: அணியின் கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது- ஏபி டி வில்லியர்ஸ்

Published On 2019-04-19 15:41 GMT   |   Update On 2019-04-19 15:41 GMT
மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக அணிகளின் கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது என ஆர்சிபி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். #IPL2019
ஐபிஎல் தொடரில் 8 மணிக்கு தொடர் நள்ளிரவில்தான் முடிவடைகிறது. போட்டியின்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்றால் அந்த அணியின் கேப்டனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது. இந்த சீசனில் ரோகித் சர்மா, ரகானே, விராட் கோலி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அபராதத்திற்குப் பதிலாக இடைவேளையை 20 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறைக்கலாம் என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘ஐபிஎல் விதிமுறைப்படி அணி தவறு செய்தால், அதற்கு கேப்டன் அபராதம் விதிக்க வேண்டிய நிலை உள்ளது. இது அவர்களை சற்று பாதிக்கிறது. இதனால் அபராதத்திற்குப் பதில் இன்னிங்ஸ் இடைவேளையை 20 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறைக்கலாம்’’ என்றார்.
Tags:    

Similar News