செய்திகள்
நாஞ்சில் சம்பத்

திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது- நாஞ்சில் சம்பத் பேட்டி

Published On 2021-04-11 13:00 GMT   |   Update On 2021-04-11 13:31 GMT
கருணாநிதி பெற்ற வெற்றிகளை தாண்டி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரலாறு படைப்பார் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
நாகப்பட்டினம்:

நாகை வந்த நாஞ்சில் சம்பத், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது. கருணாநிதி பெற்ற வெற்றிகளை தாண்டி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வரலாறு படைப்பார்.

தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் இடையே பிளவு ஏற்படாமல் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை சரியான முறையில் பங்கீடு செய்து கொடுத்து ஸ்டாலின் தனது ஆளுமை திறனை நிருபித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு கிராமசபை கூட்டம், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என பல்வேறு கட்டங்களாக பிரசாரம் மேற்கொண்டு எல்லா தொகுதி மக்களையும் சந்தித்து தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வழிவகை செய்தது பாராட்டத்தக்கது. எனவே தி.மு.க வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி தேர்தல் நேரத்திற்கான கூட்டணி. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நான் இனி ஒருபோதும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன் என கூறினார். ஆனால் அவரது பெயரை சொல்லி கட்சியை நடத்துபவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் அய்யாபிள்ளை, தி.மு.க தலைமை கழக பேச்சாளர் நாகராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News