செய்திகள்
செங்கம் பகுதியில் 2 உணவகங்களுக்கு அபராதம்
செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள 2 உணவகங்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் கைலேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் செங்கம் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு வகைகள் விற்பனை செய்யும் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள 2 உணவகங்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் நகரில் உணவு வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் உணவு பொருட்கள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.