ஆன்மிகம்
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-07-21 04:47 GMT   |   Update On 2021-07-21 04:47 GMT
ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டுக்கு சிறந்த மாதமாகும். நேற்று ஆடி மாத முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவில்களில் திருவிழாக்களை நடத்தக்கூடாது என்றும், உள் விழாவாக நடத்தும்மாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News