செய்திகள்
கைது

அலங்காநல்லூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

Published On 2020-11-22 09:23 GMT   |   Update On 2020-11-22 09:23 GMT
அலங்காநல்லூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:

அலங்காநல்லூர் பகுதியில் போலீசார் இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரை சாலையில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த ஆட்டோவில் வந்த 3 பேரும் அலங்காநல்லூர் பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்றும், சமயநல்லூர் பிரபு (வயது 26), சாமநத்தம் முருகன்(25), பழைய விளாங்குடி ராஜ்(38) ஆகிய 3 பேரையும் கைது செய்து ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும், அலங்காநல்லூர் பகுதியில் நடந்த செல்போன் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட செல்லூர் அகிம்சாபுரத்தை சேர்ந்த சரவணபாண்டி(21) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News