இஸ்லாம்
செய்யது அப்துர்ரஹ்மான் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா

செய்யது அப்துர்ரஹ்மான் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா

Published On 2022-05-09 04:36 GMT   |   Update On 2022-05-09 04:36 GMT
செய்யது அப்துர்ரஹ்மான் வலியுல்லாஹ் தர்காவில் வருகிற 15-ந் தேதி இரவு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், 19-ந் தேதி இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
கீழ்வேளூர் அருகே தே.மங்கலம் ஊராட்சி மூன்றாம் வாய்க்கால் கரையில் உள்ள செய்யது அப்துர்ரஹ்மான் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா நேற்று கொடியேற்றுத்துடன் தொடங்கியது..

முன்னதாக சிக்கல் பள்ளிவாசலில் இருந்து புனித கொடி கொண்டு வரப்பட்டு தர்கா முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் பாத்திஹா ஒதி கொடி ஏற்றப்பட்டது. வருகிற 15-ந் தேதி இரவு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், 19-ந் தேதி இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவில் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், மூன்றாம் வாய்க்கால்கரை கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News