செய்திகள்
பட்டாபிராம் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் திருடிய வாலிபர் கைது
பட்டாபிராம் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி:
பட்டாபிராம், அன்னம்பேடு பெத்தேல் நகரை சேர்ந்தவர் ரவீந்திரநாத். ரெயில்வே ஊழியர். இவரது வீட்டில் கடந்த மாதம் 14-ந்தேதி பீரோவில் இருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அன்னம்பேடு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அவர் மாங்காடு கொடி மணிவாக்கம் பகுதியை சேர்ந்த விக்கி என்ற பல்லு விக்கி என்பதும், ரெயில்வே ஊழியர் ரவீந்திர நாத் வீட்டில் ஏற்கனவே கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான். மேலும் மீண்டும் அப்பகுதியில் கொள்ளையடிக்க சுற்றி வந்ததாக தெரிவித்தான்.
இதையடுத்து விக்கியை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 12 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
பட்டாபிராம், அன்னம்பேடு பெத்தேல் நகரை சேர்ந்தவர் ரவீந்திரநாத். ரெயில்வே ஊழியர். இவரது வீட்டில் கடந்த மாதம் 14-ந்தேதி பீரோவில் இருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அன்னம்பேடு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அவர் மாங்காடு கொடி மணிவாக்கம் பகுதியை சேர்ந்த விக்கி என்ற பல்லு விக்கி என்பதும், ரெயில்வே ஊழியர் ரவீந்திர நாத் வீட்டில் ஏற்கனவே கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான். மேலும் மீண்டும் அப்பகுதியில் கொள்ளையடிக்க சுற்றி வந்ததாக தெரிவித்தான்.
இதையடுத்து விக்கியை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 12 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.