செய்திகள்
தற்கொலை

திருமங்கலத்தில் ஓட்டல் தொழிலாளி தற்கொலை

Published On 2021-07-18 10:54 GMT   |   Update On 2021-07-18 10:54 GMT
திருமங்கலத்தில் ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அன்னகாமு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 35), ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.இதனால் கோபித்துக் கொண்டு மீனாட்சி தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன வேதனை அடைந்த பாலகிருஷ்ணன் நேற்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடம் வந்து பாலகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News