செய்திகள்
தற்கொலை

ராதாபுரத்தை சேர்ந்த விவசாயி தற்கொலை

Published On 2021-04-23 09:51 GMT   |   Update On 2021-04-23 09:51 GMT
ராதாபுரம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 60), விவசாயி.

இவருக்கும் இவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த முருகன், மேலப்பாளையத்தில் உள்ள மகன் வீட்டிற்கு செல்வதாக கூறி உள்ளார். ஆனால் அவர் மேலப்பாளையத்தில் உள்ள மகன் வீட்டிற்கு செல்லாமல், தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் அருகே வி‌ஷம் குடித்து விட்டு படுத்துக்கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தச்சநல்லூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார். 

Tags:    

Similar News