உள்ளூர் செய்திகள்
சேந்தமங்கலம் அருகே வெறிநாய் கடித்து ஆடுகள் பலியாகின
கொல்லிமலை:
சேந்தமங்கலம் அருகே பேளுகுறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் பகுதியில் வசித்து வருபவர் தனபால். விவசாயியான இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார், மேய்ச்சலில் இருந்தபோது சில ஆடுகளை வெறிநாய் கடித்து குதறியது. ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
இதனை கண்டு தனபால் அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர்கள் பள்ளிப்பட்டி கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அங்கேயே ஆடுகள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆடுகளை புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது