செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் இன்று புதிதாக மேலும் 20,240 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-09-12 12:58 GMT   |   Update On 2021-09-12 12:58 GMT
கேரளாவில் இன்று 67 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 22,551 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் இன்று புதிதாக மேலும் 20,240 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43,75,431 ஆக உயர்ந்துள்ளது. இன்று 67 பேர் உயிரிழந்துள்ளதால், இதுவரை உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 22,551 ஆக அதிகரித்துள்ளது.

29,710 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால்  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  41,30,065 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 2,22,255 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 1,15,575 மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. இதில் 17.51 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எர்ணாகுளத்தில் அதிகபட்சமாக 2,572 பேரும், திருச்சூரில் 2,451 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய பாதிப்பில் 101 பேர் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆவார்கள். 114 வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். 19,251 பேர் தொடர்பில் இருந்தவர்கள்.
Tags:    

Similar News