செய்திகள்
நாராயணசாமி

பேருந்துகளை இயக்க தமிழக அரசுடன் பேச்சு- நாராயணசாமி

Published On 2020-10-18 10:44 GMT   |   Update On 2020-10-18 11:12 GMT
புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்து சேவை தொடங்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது, 

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்து சேவை தொடங்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறைந்து புதுச்சேரி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும். 

புதுச்சேரியில் இறப்பு விகிதம் குறைவு என்பதால் மக்கள் மெத்தனமாக இல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

மருத்துவப் படிப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீகிதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரலாற்று துரோகம் என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News