செய்திகள்
கைது

குளித்தலை அருகே மது விற்ற 2 பேர் கைது

Published On 2021-07-21 15:35 GMT   |   Update On 2021-07-21 15:35 GMT
குளித்தலை அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:

குளித்தலை பஸ் நிலையம் அருகே சினிமா தியேட்டர் இருக்கும் பகுதியில் மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மது விற்ற குளித்தலை சோழகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 36) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல, வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தளவாபாளையம் ஆட்டோக்கள் நிறுத்துமிடத்தில் மது விற்றதாக பிலிப் நகரை சேர்ந்த காளி என்கிற முருகையன் (40) கைது செய்யப்பட்டார்.

அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags:    

Similar News