ஆன்மிகம்
வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
எப்பொழுதும் விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அரசு அறிவுரையின்படி சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் அருகில் உள்ள சேவியர் திடல் மாநாட்டு பந்தலில் கிறிஸ்மஸ் குடில் அமைக்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் பேராலய தியான மண்டபம் செல்லும் வழியில் மின் விளக்குகளால் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தை சுற்றி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காணப்பட்டது. ஏசு பிறப்பு நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மற்று சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்து இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி ேவளாங்கண்ணி ேபராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது குழந்தை ஏசு சொரூபம் பவனியாக எடுத்து வரப்பட்டு அதை பேராலய அதிபர் பிரபாகரிடம் கொடுக்கப்பட்டது. பின்னர் அதை பங்குத்தந்தை அற்புதராஜ் பெற்று அருகில் உள்ள குடிலில் 11.30 மணிக்கு வைத்து ஏசு பிறந்ததாக அறிவித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முக கவசம் அணிந்தும் கலந்து ெகாண்டனா். அதற்கான ஏற்பாடுகளை பேராலயம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனா். திருப்பலியில் ேவளாங்கண்ணி ேபராலய பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் பலா் கலந்து கொண்டனர்.