ஆன்மிகம்
முருகன்

சண்முக கவசம் படித்தால் கல்வி, தொழிலில் உள்ள எதிர்ப்புகள் அகலும்

Published On 2021-03-08 04:10 GMT   |   Update On 2021-03-08 04:10 GMT
தினந்தோறும் நாம் சண்முக கவசம் பாராயணம் செய்வதால் கல்வி, தொழிலில் உள்ள எதிர்ப்புகள் அனைத்தும் பனிபோல் விலகும். அதுமட்டுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்யும்.
பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசத்தை தினமும் 3 முறை பாராயணம் செய்யும் பக்தர்களுக்கு முருகப் பெருமான் பல்வேறு நன்மைகளை அளிப்பார். இந்த உலகத்தில் பல்வேறு மாயைகளில் நாம் சிக்கி துன்பப்பட்டு வருகிறோம்.

வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும் போது அவற்றில் இருந்து வெளியேற நமக்கு உறுதுணையாக இருப்பது பக்தி என்னும் அமுத சுரபி. அதிலும் முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு வினைகள் எல்லாம் விலகி போகும்.

அந்த வகையில் முருகனை தினந்தோறும் நாம் பூஜிக்க கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதில் சண்முக கவசத்தை படிப்பதால் நமது மனம் சுகம் பெறும்.

இவற்றை தினமும் பாராயணம் செய்வதால் கல்வி, தொழிலில் உள்ள எதிர்ப்புகள் அனைத்தும் பனிபோல் விலகும். அதுமட்டுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்யும்.
Tags:    

Similar News