உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

முதலியார்பேட்டையில் 18-ந்தேதி ஜோதி தரிசன விழா

Published On 2022-01-15 10:14 GMT   |   Update On 2022-01-15 10:14 GMT
புதுவை முதலியார்பேட்டை ராமலிங்க சாமி மடத்தில் 18-ந்தேதி ஜோதி தரிசன விழா நடக்கிறது.
புதுச்சேரி:

முதலியார்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் 73-ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது.  இதையொட்டி 17-ந்தேதி காலை 6 மணிக்கு அகவல் உணர்ந்தோதுதல், சத்தியஞான கொடியேற்றுதல் நடக்கிறது. 

அன்று காலை 8 மணிக்கு வள்ளலார் திருவுருவப்பட ஊர்வலம் நடக்கிறது. 10 மணிக்கு சன்மார்க்கம் தழைக்க பெண்களின் பங்கு என்ற தலைப்பில் ராணிராஜதுரை, வள்ள லாரின் மொழிப்புலமை தலைப்பில் தமிழ் மல்லன், புரட்சியாளர் வள்ளலார் தலைப்பில் தமிழ்மணி, கண்மூடி பழக்கங்கள் தலைப்பில் கோதண்டபாணி ஆகியோரின் சொற் பொழிப்பு நடக்கிறது. 

18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு 7 திரை நீக்கி அருட்பெருஞ்ஜோதி காட்சி வழிபாடு நடக்கிறது. காலை 9 மணிக்கு பசிப்பிணி மருத்துவர் தலைப்பில் வேல்முருகன், வள்ளலாரின் சமூகப்பணி தலைப்பில் ராமதாஸ் ஆகியோர் சொற்பொழிவு ஆற்றுகின்றனர். 

11 மணிக்கு யோகா, பரதநாட்டிய நிகழச்சிகள் நடக்கிறது. பகல் 1 மணி, இரவு 8 மணிக்கு ஜோதி தரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சமரச சுத்த சன்மார்க்க  சத்திய சங்க பொறுப்பு தலைவர் ஜெகநாதன், நிர்வாக அலுவலர் கோபி ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News