செய்திகள்
பெரம்பலூர் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை
பெரம்பலூர் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர்- வடக்கு மாதவி சாலை ஒடச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 56). கட்டிட மேஸ்திரியான இவா் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.