தொழில்நுட்பம்
ட்விட்டர்

புது வசதி வழங்க இந்திய நிறுவனங்களுடன் பணியாற்றும் ட்விட்டர்

Published On 2021-05-08 05:27 GMT   |   Update On 2021-05-08 05:27 GMT
ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் பேமண்ட் வசதி வழங்க மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.


உலகில் ட்விட்டர் சேவையை பயன்படுத்துவோரில் டிப் ஜார் அம்சம் தற்போது தொண்டு நிறுவனங்கள், செய்தியாளர்கள் மற்றும் கிரியேட்டர்களுக்கு மிக குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்பட்டு வருகிறது. 



இதுதவிர டிப் ஜார் வசதியை வழங்க இந்திய பேமண்ட் நிறுவனங்களுடன் ட்விட்டர் பணியாற்றி வருகிறது. இந்த சேவையை ஆங்கிலம் மட்டுமின்றி மேலும் சில மொழிகளில் வழங்க இருக்கிறது. தற்போது டிப் ஜார் அம்சம் பேண்ட்கேம்ப், கேஷ் ஆப், பேட்ரியான், பேபால் மற்றும் வென்மோ போன்றே ஆப்ஷன்களை வழங்குகிறது.

ட்விட்டர் நிறுவனம் பேமண்ட் வசதியை வழங்க இந்த சேவைகளை நாடி இருக்கிறது. ஒருவரின் ப்ரோபைலில் இருக்கும் டிப் ஜார் ஐகான் கொண்டு மற்றவர்களுக்கு பணம் அனுப்பலாம் என ட்விட்டர் தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News