செய்திகள்
விபத்து

திண்டுக்கல் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பலி

Published On 2019-10-08 11:01 GMT   |   Update On 2019-10-08 11:01 GMT
திண்டுக்கல் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர்.

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகில் உள்ள ராமையன்பட்டியை சேர்ந்தவர் ஜான்பீட்டர்(வயது48). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு பாலம்ராஜக்காபட்டி அருகே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி காய்கறிகள் ஏற்றி வந்த வேன் பயங்கரமாக மோதியது.

இதில் ஜான்பீட்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரபீக் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திண்டுக்கல் அருகே ராஜதானிகோட்டையை சேர்ந்த பொன்னையன் மகன் பாண்டி(35) கூலித்தொழிலாளி. நேற்று இரவு திண்டுக்கல்லில் இருந்து கொடைரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். மெட்டூர் மேம்பாலம் அருகே வந்தபோது தடுப்புச்சுவரில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News