ஆன்மிகம்
திருவையாறு ஐயாறப்பர்

திருவையாறு காவிரி ஆற்றில் ஐயாறப்பர் தீர்த்தவாரி

Published On 2021-08-04 08:38 GMT   |   Update On 2021-08-04 08:38 GMT
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று ஐயாறப்பர் கோவிலில் இருந்து சூலபாணி மட்டும் காவிரி படித்துறைக்கு எடுத்து வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.
திருவையாறில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நேற்று காவிரி ஆற்றில் ஐயாறப்பர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக இந்த நிகழ்ச்சியின்போது ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் காவிரி ஆற்றின் புஷ்யமண்டப படித்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி அருள்வார்.

ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று ஐயாறப்பர் கோவிலில் இருந்து சூலபாணி மட்டும் காவிரி படித்துறைக்கு எடுத்து வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது. திருவையாறு திருமஞ்சனவீதியில் காவிரி படித்துறையில் பொதுமக்கள் தடையை மீறி ஆடிப்பெருக்கு வழிபாடுகளை செய்தனர்.
Tags:    

Similar News