லைஃப்ஸ்டைல்
கருப்பு கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, சோடியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன. கருப்பு கொண்டைக்கடலை குருமா செய்முறையை பார்க்கலாம்.
தேவையானப் பொருள்கள்:
கருப்பு கொண்டைக்கடலை - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கொத்துமல்லி இலை - ஒரு கொத்து
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
அரைக்க:
தேங்காய் - 3 துண்டுகள்
கசகசா - 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1/4 டீஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 1
பிரிஞ்சி இலை - 1
சீரகம் - கொஞ்சம்
பெருஞ்சீரகம் - கொஞ்சம்
செய்முறை:
கருப்பு கொண்டைக்கடலையை முதல் நாளிரவே ஊற வைத்து விடவும்.
கடலையைக் கழுவிவிட்டு, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து, வேக வைத்து, நீரை வடித்து வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெறும் வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும் .ஊறியதும் தேங்காய், பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் வேக வைத்த கடலையை சேர்த்துக் கிளறிவிட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு, கடலை மூழ்கும் அளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.
எல்லாம் நன்றாகக் கலந்து, சிறிது நேரம் கொதித்து, வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைக் குருமாவில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.
கொதி வந்து பிறகு எலுமிச்சை சாறு, கொத்துமல்லி தூவிக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்திவிடவும்.
இப்போது அருமையான, கருப்பு கொண்டைக்கடலை குருமா தயார்.
கருப்பு கொண்டைக்கடலை - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கொத்துமல்லி இலை - ஒரு கொத்து
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
அரைக்க:
தேங்காய் - 3 துண்டுகள்
கசகசா - 1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1/4 டீஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 1
பிரிஞ்சி இலை - 1
சீரகம் - கொஞ்சம்
பெருஞ்சீரகம் - கொஞ்சம்
முந்திரி - 5
செய்முறை:
கருப்பு கொண்டைக்கடலையை முதல் நாளிரவே ஊற வைத்து விடவும்.
கடலையைக் கழுவிவிட்டு, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து, வேக வைத்து, நீரை வடித்து வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெறும் வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும் .ஊறியதும் தேங்காய், பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் வேக வைத்த கடலையை சேர்த்துக் கிளறிவிட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு, கடலை மூழ்கும் அளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.
எல்லாம் நன்றாகக் கலந்து, சிறிது நேரம் கொதித்து, வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைக் குருமாவில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.
கொதி வந்து பிறகு எலுமிச்சை சாறு, கொத்துமல்லி தூவிக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்திவிடவும்.
இப்போது அருமையான, கருப்பு கொண்டைக்கடலை குருமா தயார்.
இது பூரி, சப்பாத்தி, நாண், சாதம் இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.