செய்திகள்
நகை பறிப்பு

கடைக்கு நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு

Published On 2021-02-17 15:45 GMT   |   Update On 2021-02-17 15:45 GMT
கடைக்கு நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை குலமங்கலம் மெயின் ரோடு என்.பி.நகரை சேர்ந்தவர் குருதேவி (வயது 63). இவர் கடைக்கு செல்வதற்காக பி.என்.டி.நகர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் திடீரென்று குருதேவி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து அவர் கூடல்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News