செய்திகள்
கைது

நிலக்கோட்டை அருகே கண்மாயில் மண் அள்ளிய 2 பேர் கைது

Published On 2021-04-11 12:13 GMT   |   Update On 2021-04-11 12:13 GMT
நிலக்கோட்டை அருகே கண்மாயில் பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் மூலம் மண் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறை பகுதியில் தாதரேயன்பட்டி கண்மாயில் பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் மூலம் 2 பேர் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்கள் 2 பேரையும் பிடித்தனர். 

விசாரணையில் அவர்கள், கொங்கபட்டியை சேர்ந்த முத்துராமன் (வயது 25), புல்லகாடுபட்டியை சேர்ந்த முத்துபெருமாள் (40) என்றும், அவர்கள் அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளி செல்வதும் தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் டிராக்டர், பொக்லைன் எந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News