செய்திகள்
போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2021-02-23 13:07 GMT   |   Update On 2021-02-23 13:07 GMT
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பதை கண்டித்து கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்:

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News