உள்ளூர் செய்திகள்
வேலூர் மண்டி தெருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்

பொங்கல் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

Published On 2022-01-13 10:09 GMT   |   Update On 2022-01-13 10:09 GMT
வேலூர் மார்க்கெட்டில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
வேலூர்:

பொங்கல் பண்டிகை யொட்டி வேலூர் மார்க்கெட்டுக்கு லாரிகள் மூலம் கரும்புகள் கொண்டு வரபட்டது.

சிதம்பரம், பண்ரூட்டி சேத்தியாதோப்பு போன்ற பகுதிகளிலிருந்து கரும்புகள் வந்தன. 20 கரும்புகள் கொண்ட ஒருகட்டு ரூ.300 முதல் ரூ.350வரை விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கலையொட்டி மண்பானை, மஞ்சல், வண்ணகோல பொடிகள், பூக்கள் மக்கள் ஆர்வமாக வந்து வாங்கி செல்கின்றனர். மஞ்சல் ரூ.40 முதல் விற்பனை செய்யபட்டன.
பொங்கல் பண்டிகைக்கான அதிகளவில் சக்கரைவள்ளி கிழங்கு, பூசணிக்காய், வாழைக்காய், கருணை கிழங்கு போன்றவை வந்துள்ளன.

காய்களின் விலை விவரம் தக்காளி (கிலோ) ரூ.50, மொச்சை ரூ.60, சக்கரவள்ளி கிழங்கு ரூ.40, கத்தரிக்காய் ரூ.60, கேரட் ரூ.40, முள்ளங்கி ரூ.10, கருணைகிழங்கு ரூ.30, உருளை கிழங்கு ரூ.40, சேனை கிழங்கு ரூ.30, சேப்பங்கிழங்கு ரூ.30, பூசணிக்காய் (கிலோ) ரூ.30, வாழைக்காய் ரூ.5 என விற்கப்படுகின்றன.

பூக்கள் சீசன் முடிந்துவிட்டதால் வரத்து குறைவாக பூக்கள் சீசன் முடிந்துவிட்டதால் வரத்து குறைவாக உள்ளது. இதனால் பூக்கள் விலை குறையவில்லை மல்லி கிலோ ரூ.700, முல்லை ரூ.700, சாமந்தி ரூ.100 முதல் 250 வரையிலும், கனகாம்பரம் ரூ.1200 ரோஜா ரூ.150, துளசி ஒரு கட்டு ரூ.5க்கும் விற்பனையானது. 

வேலூர் மார்க்கெட்டுக்கு மக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் குற்ற நடவடிக்கைகள் தடுக்க போலீசார் மாறு வேடத்தில் மக்களோடு மக்களாக தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றன.
Tags:    

Similar News