செய்திகள்

ஆசனூர் அருகே கூட்டமாக ரோட்டில் உலா வரும் யானைகள் - வனத்துறையினர் எச்சரிக்கை

Published On 2019-05-11 14:03 GMT   |   Update On 2019-05-11 14:03 GMT
ஆசனூர் அருகே யானைகள் கூட்டமாக ரோட்டில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர், தலமலை, தாளவாடி, ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் மற்றும் வன விலங்குகள் உள்ளன.

ஆசனூர், தாளவாடி, தலமலை பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் வன விலங்குகள் தாகம் தீர்க்க வனப்பகுதியில் உள்ள வன குட்டையில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.

கடந்த வாரம் வனபகுதியில் கோடை மழை பெய்தது. இதனால் காய்ந்து கிடந்த மரம் செடிகள் உயிர் பெற்று பசுமையாக காட்சி அளிக்கிறது. கோடை மழை பெய்தாலும் ஆசனூர் பகுதியில் உள்ள குட்டைகள் நிரம்பும் அளவுக்கு மழை பெய்யவில்லை.

இதனால் யானைகள் ஆசனூர் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கூட்டமாக வருகிறது. அவ்வப்போது ரோட்டை கடக்கும் யானைகள் அங்கு உள்ள மூங்கில் மரத்தை உடைத்து சாப்பிட்டு வருகிறது.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர். அதே போல் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுத்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ அபராதம் விதிக்கபடும் என்று எச்சரித்தனர்.
Tags:    

Similar News