செய்திகள்
கைது

வேலூரில் ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

Published On 2021-03-03 13:33 GMT   |   Update On 2021-03-03 13:33 GMT
வேலூரில் ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் அலமேலுமங்காபுரம் பஜனை கோவில்தெருவை சேர்ந்தவர் வடிவேலன் (வயது 40), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் எஸ்.வி.சி. காந்திநகரில் சென்றபோது ஆட்டோவை வழிமறித்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி வடிவேலன் சட்டை பையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றார்.

இதுகுறித்து வடிவேலன் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது எஸ்.வி.சி. காந்திநகரை சேர்ந்த பிரபு (26) என்பது தெரிய வந்தது. அதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News