செய்திகள்
பணம் திருட்டு

மீனவர் வீட்டில் ரூ.1½ லட்சம் திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2020-10-30 09:51 GMT   |   Update On 2020-10-30 09:51 GMT
மரக்காணம் அருகே மீனவர் வீட்டில் ரூ.1½ லட்சம் திருட்டுபோன சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:

மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 30). மீனவரான இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.

பின்னர் மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் ரொக்கம் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

செல்வத்தின் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்ததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து செல்வம், மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News