ஆன்மிகம்
சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பனையூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பனையூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி மகா சாந்தி ஹோமம், அஷ்டபந்தன சமர்ப்பித்தல், நவகலச சதுர்த்தி கலசங்கள், மகா சாந்தி ஹோமம், கும்ப புறப்பாடு, மகா சாந்தி, கும்ப திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னர் சுந்தர வரதராஜ பெருமாளுக்கு நன்னீராட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ஸ்ரீசுந்தர வரதராஜ பெருமாள் திருக்கல்யாண வைபவம் திருவீதி உலாவும் வந்தனர்.
வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்டு பக்தர்கள் மீது மலர்கள் தூவப்பட்டன பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் சுந்தர வரதராஜ பெருமாளுக்கு நன்னீராட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் ஸ்ரீசுந்தர வரதராஜ பெருமாள் திருக்கல்யாண வைபவம் திருவீதி உலாவும் வந்தனர்.
வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்டு பக்தர்கள் மீது மலர்கள் தூவப்பட்டன பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.