செய்திகள்
கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பலி

Published On 2021-02-21 17:37 GMT   |   Update On 2021-02-21 17:37 GMT
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:

மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4 லட்சத்து 15 ஆயிரத்து 379 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,636 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 16, 382 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

19 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. 2,054 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை. நேற்று மேலும் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News