செய்திகள்
முதல்- அமைச்சர் நாராயணசாமி

கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு- நாராயணசாமி

Published On 2021-01-10 14:08 GMT   |   Update On 2021-01-10 14:08 GMT
புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.

புதுவை மறைமலையடிகள் சாலையில் நேற்று முன்தினம் முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் தொடங்கிய தர்ணா போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது.

போராட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. போராட்டத்தில் பங்கேற்க வில்லை.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
ஜனவரி 22ஆம் தேதி கவர்னர் கிரண்பேடிக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். பிப்.1ஆம்தேதி உண்ணாவிரதம் நடத்தப்படும் என்றார். 
Tags:    

Similar News