செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுவையில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2021-10-15 10:11 GMT   |   Update On 2021-10-15 10:11 GMT
புதுவையில் 2-வது தவணை உட்பட 10 லட்சத்து 66 ஆயிரத்து 479 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில் 2-வது தவணை உட்பட 10 லட்சத்து 66 ஆயிரத்து 479 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 33, காரைக்காலில் 2, மாகியில் 2 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் 75, காரைக்காலில் 10, ஏனாமில் 5, மாகியில் 9 பேர் என 99 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 46, காரைக்காலில் 23, மாகியில் 4 பேர் என 73 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 296 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 836 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுவையில் 328, காரைக்காலில் 134, ஏனாமில் 9, மாகியில் 41 பேர் என 512 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதுவை மாநிலத்தில் இப்போது 611 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 849 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை உட்பட 10 லட்சத்து 66 ஆயிரத்து 479 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News