உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் பொதுமக்களிடம் குறைகேட்ட விஜய்வசந்த் எம்.பி.
நாகர்கோவிலில் பொதுமக்களிடம் விஜய்வசந்த் எம்.பி. குறைகள் கேட்டறிந்தார்.
நாகர்கோவில்:
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். அகஸ்தீஸ்வரத்தில் பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த விஜய் வசந்த் எம்.பி. இன்று காலை நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பீச்ரோடு பகுதியில் உள்ள வடலிவிளை அரசு பள்ளியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.சாலை வசதி குடிநீர் வசதி உதவி தொகை கேட்டு பொதுமக்கள் ஏராளமானோர் மனு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் நவீன்குமார், செல்வக்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன் மற்றும் அந்தோணி முத்து, ராஜபாண்டி, வடலி மகா லிங்கம், பிரவீன், நிக்சன், அமுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.