ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் அருள்பாலித்த காட்சி.

கார்த்திகை மாத திருவிழா: சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர்

Published On 2021-11-16 06:57 GMT   |   Update On 2021-11-16 06:57 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்துவரும் கார்த்திகை திருவிழாவின் 2-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் அருள்பாலித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களிலும் திருவிழா நடைபெறும். அதில் கார்த்திகை மாதத்திற்கான திருவிழா கொடியேற்றம் 14-ம் தேதி தொடங்கிது. இந்த திருவிழா 23-ந் தேதி வரை நடக்கிறது.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தினமும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

கார்த்திகை திருவிழாவின் 2-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடையுடன் அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

முக்கிய திருவிழாவான 19-ந் தேதி பெரியகார்த்திகை அன்று கோவிலில் மாலை 6 மணிக்கு லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதிகளில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளி அங்கு சொக்கப்பனை ஏற்றப்படுகிறது.

திருவிழா நடைபெறும் நாட்களில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் நடைபெறாது.
Tags:    

Similar News