ஆன்மிகம்
சிம்ம வாகனத்தில் கோதண்டராமர்

பிரம்மோற்சவ விழா 3-வது நாள்: சிம்ம வாகனத்தில் கோதண்டராமர்

Published On 2021-03-16 03:00 GMT   |   Update On 2021-03-16 03:00 GMT
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று சிம்ம வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதைத்தொடர்ந்து உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஊஞ்சல் சேவையும், இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை முத்துப்பந்தல் வாகனச் சேைவயும் நடந்தது.

விழாவில் பெரிய ஜீயர்சுவாமிகள், சின்னஜீயர் சுவாமிகள், சிறப்பு நிலை துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்கராஜு, கோவில் சூப்பிரண்டு ரமேஷ், ஆய்வாளர்கள் முனிரத்தினம், ஜெயக்குமார் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News