செய்திகள்
கருப்பு பூஞ்சை

விழுப்புரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி

Published On 2021-06-07 09:34 GMT   |   Update On 2021-06-07 09:34 GMT
கருப்பு பூஞ்சை நோயால் கிருஷ்ணகுமார் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம்:

விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 40). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அவருடன் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியானார். அவரது இறுதி சடங்கில் கிருஷ்ணகுமார் பங்கேற்றார். அதன்பின்னர் சில தினங்களில் கிருஷ்ணகுமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்தார். அதில் கிருஷ்ணகுமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து கொரோனா சிகிச்சை மையத்தில் கிருஷ்ணகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயால் கிருஷ்ணகுமார் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தார்.

Tags:    

Similar News