செய்திகள்
10-வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு
மேட்டூர் அணை நடப்பாண்டில் 4-வது முறையாக கடந்த 11-ந் தேதி உச்ச நீர்மட்டமான 120 அடியை எட்டியது. தற்போது வரை அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் மேட்டூர் அணை நடப்பாண்டில் 4-வது முறையாக கடந்த 11-ந் தேதி உச்ச நீர்மட்டமான 120 அடியை எட்டியது. தற்போது வரை அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. இதனால் அணை கடல்போல் காட்சி அளிக்கிறது.
மேட்டூர் அணைக்கு இன்று 8 ஆயிரத்து 143 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 7 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது
அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 10 நாட்களாக 120 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் மேட்டூர் அணை நடப்பாண்டில் 4-வது முறையாக கடந்த 11-ந் தேதி உச்ச நீர்மட்டமான 120 அடியை எட்டியது. தற்போது வரை அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. இதனால் அணை கடல்போல் காட்சி அளிக்கிறது.
மேட்டூர் அணைக்கு இன்று 8 ஆயிரத்து 143 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 7 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது
அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 10 நாட்களாக 120 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.