செய்திகள்
கோப்புப்படம்

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,638 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-21 18:17 GMT   |   Update On 2021-04-21 18:17 GMT
டெல்லியில் இன்று ஒரே நாளில் 24,600 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,31,179 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 24,638 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,30,179 ஆக அதிகரித்துள்ளது.



இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 249 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,887 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 24,600 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,31,179 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 85,364 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News