செய்திகள்
மயிலாடுதுறையில் கொரோனாவுக்கு முதியவர் பலி
மயிலாடுதுறை மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 227 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 19 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 95 வயது முதியவர் பலியானார். தற்போது 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.