உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி அருகே பொன் ஏர் திருவிழா- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கோவில்பட்டி அருகே நடைபெற்ற பொன் ஏர் திருவிழாவை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கோவில்பட்டி:
தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக இயற்கை இடர்பாடுகள் இல்லாமல் விவசாயம் செழிக்க வேண்டி சித்திரை திருநாளை பொன் ஏர் பூட்டும் திருநாளாக விவசாய பெருமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர் குளத்தில் பொன் ஏர் பூட்டும் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ டிராக்டரை இயக்கி தொடங்கி வைத்தார்.