செய்திகள்
ஆதித்ய கணேஷ்

டிஎன்பிஎல் கிரிக்கெட்- சேலம் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருச்சி

Published On 2021-08-01 13:55 GMT   |   Update On 2021-08-01 13:55 GMT
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது.
சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 18வது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், ரூபி திருச்சி வாரியார்ஸ் அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முருகன் அஸ்வின் 21 ரன்கள் எடுத்தார். அக்சய் சீனிவாசன் 19 ரன்களும்,  அபிஷேக் 14 ரன்களும், கேப்டன் டேரில் பெராரியோ 14 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய திருச்சி அணி, 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

துவக்க வீரர்கள் சந்தோஷ் ஷிவ் (6), அமித் சாத்விக் (18) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். முகமது அத்னன் கான் 13 ரன்களிலும், நிதிஷ்  ராஜகோபால் 22 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின்னர் 5வது விக்கெட்டுக்கு இணைந்த ஆதித்ய கணேஷ் (28), அந்தோணி தாஸ் (24) கடைசி வரை நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதனால் திருச்சி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சேலம் தரப்பில் பெரியசாமி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். திருச்சி அணி கேப்டன் ரகில் ஷா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

திருச்சி அணி  இதுவரை 6 லீக் போட்டிகளில்  விளையாடி உள்ளது. இதில் 4 வெற்றி, 2 தோல்வி என மொத்தம் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
Tags:    

Similar News