செய்திகள்
தற்கொலை

பந்தலூர் அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

Published On 2021-04-23 13:04 GMT   |   Update On 2021-04-23 13:04 GMT
பந்தலூர் அருகே கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர்:

பந்தலூர் அருகே உள்ள பழைய நெல்லியாளம் நாராங்காவயலை சேர்ந்தவர் கங்காதரன், அரசு போக்குவரத்து கழக கண்டக்டர். இவருடைய மகன் பிரசாந்த் (வயது 24). இவர் சம்பவத்தன்று கோவைக்கு செல்வதாக வீட்டைவிட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தினர் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கங்காதரன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி வாலிபரின் உடலை மீட்டனர். இதில் அவர் பிரசாந்த என்பதும், அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News