உள்ளூர் செய்திகள்
திருட்டு

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 22 பவுன் நகை திருட்டு

Published On 2021-12-27 03:43 GMT   |   Update On 2021-12-27 03:43 GMT
விருதுநகர் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 22 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள மீசலூரை சேர்ந்தவர் கல்யாண வள்ளி தாயார் (வயது 73). இவர் சூலக்கரை செல்வதற்காக விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தாதம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.

சூலக்கரை மின்வாரிய காலனியில் இறங்கியவுடன் தன் கையில் வைத்திருந்த பையை பார்த்தபோது பையில் இருந்த 22 பவுன் நகை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் சூலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News