ஆன்மிகம்
பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு

புலியகுளம் மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு

Published On 2021-04-09 04:44 GMT   |   Update On 2021-04-09 04:44 GMT
கோவை புலியகுளம் மாரியம்மன் கோவில் திருவிழாயை முன்னிட்டு பெண்கள் பலர் கலந்து கொண்டு அலகு குத்தி வழிபாடு நடத்தினர். சில பெண்கள் கையில் தீச்சட்டி ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர்.
கோவை புலியகுளம் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று காலை அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா, மகா அபிஷேக அலங்கார ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையொட்டி பெண்கள் பலர் கலந்து கொண்டு அலகு குத்தி வழிபாடு நடத்தினர். சில பெண்கள் கையில் தீச்சட்டி ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News