செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிளையும் போலீசார் மீட்டனர்.
திண்டிவனம்:
திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான தனிப்படைபோலீசார் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திண்டிவனத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வக்குமார் (வயது 21) என்பதும், அவர் மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு வந்ததும் தெரிந்தது.
மேலும் அவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது மற்றும் ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிளையும் போலீசார் மீட்டனர்.
திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான தனிப்படைபோலீசார் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திண்டிவனத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வக்குமார் (வயது 21) என்பதும், அவர் மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு வந்ததும் தெரிந்தது.
மேலும் அவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது மற்றும் ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிளையும் போலீசார் மீட்டனர்.