செய்திகள்
கனமழை

கனமழை எதிரொலி - கடலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Published On 2021-11-09 01:12 GMT   |   Update On 2021-11-09 01:12 GMT
கடலூரில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
கடலூர்:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வரும் 11-ம் தேதி வரை மிதமான மழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கடலூரில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். 
Tags:    

Similar News